01 அக்டோபர் 2011

காதலின் கடைசி கூற்றாய்...

காதலர்களுக்கு சில கணைகள்
காதல் என்றால் என்ன ?
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலின்
புதுயுலகமாம் ...
ஏற்றுகொள்ள இயலவில்லை
என்னைப்பொருத்தமட்டில்
காதல் காமத்தின் காவியுடை ..
ஆம்
காமம் ஒன்று இல்லையேல் இங்கு
காதலும் இல்லை ..
காவியும்  இல்லை ..


கடவுள் முதல் கல்லறைப்பூக்கள் வரை
காதலை காமமாய் காட்சி ஏற்றும் ..
ஆம்
மகரந்ததிற்கு  தன் மடிவிரித்திரிக்கும் மலர்கள்
ஏன்? மொட்டுக்களாவே
மூடியிருக்கலாமே....
ஏன் ?
ஆடை அவிழ்த்து
அழகூட்ட  வேண்டும்...


ப(ம )றந்து வரும் மன்மத தேனீக்கள்
அங்கே ..
முதலில் பூக்களை புரிந்துகொள்ள வருவதில்லையே
புணர்ந்து ,காமத்தேனை கறந்து செல்கிறது ..
காதலின்
கடைசி கூற்றாய்..
புரிதல் மட்டுமல்ல காதல்
புனர்வதற்காக வெளிப்படுத்தும்
புனித புரிதல் செயல்தான் ..
காதல் .

12 செப்டம்பர் 2011

கடவுளும் கவிஞன்தான்

என்னுயிர் படைத்த பிரம்மன்
உன்னுயிர் படைத்தல் நேரம்
உன்னுடன் காதல் கொண்டானோ
பெண்ணுயிராய் படைக்கவேண்டிய உன்னை
என்னுயிர் எடுக்கும் எமனாக்கிவிட்டான்
ஆம்
 உலகின்  கவிதைகளை எல்லாம்
தொகுத்து
ஒட்டுமொத்த உயிர் புத்தகமாய்
உன்னில் எழுதிவிட்டான் ..
கடவுளையும் கவி பாட விட்டாயடி !!

கடவுளும் கவிஞன்தான்
உன்னைப்படைத்ததால் !!! 

கவிதைகள்தானே


குழல் 

காணத உண்மையை கண்டேன்
ஆம்
கரு நிற பூக்களின் மணம் தேடி வந்த
பசிமயக்க பட்டாம்பூச்சிகள்
பறக்க மனமின்றி படுத்துறங்கின
உன் குழலில் ...

பொட்டு
நெற்றி வானில்
குட்டி அம்மாவாசை


புருவங்கள்
அம்புங்கள் இன்றி
எய்தும்
வில் ..

மையிட்ட கண்கள்
தண்ணீரின்றி தவிக்கும்
மோக மீன்கள் ..

மூக்கு
நான் வாழ கொடுக்கும்
ஆக்ஸ்சிஜென்
கூடம் ..
உதடுகள்
அணையாமல் ஓடும்
எரிமலை குழம்புகள் ..


பற்கள்

 நீ
சிரிக்கையில்
அணிவகுக்கும்
நட்சத்திரங்கள் ...


கடலில்
காணத சங்காய்
உன் கழுத்தும்

மகுடங்கள்
தொங்கும் மடலாய்
 உன் காதுகளும்
கவிதைகள்தானே !!!

06 ஆகஸ்ட் 2011

கலைந்த கோலம்

கலைந்த அழகான 
ஒரு கோலம் 
அவளின் குழல் ..


உருகிய எரிமலைகளுக்கிடையில் 
ஓடும் பாலாறு 
அவளின் சிரிப்பு ...


பிச்சைக்காரன்

ஆனேன் !
பிச்சைக்காரன் 
சில்லறைக்காக அல்ல 
உன் 
சிரிப்புக்காக ...


ஓவிய மச்சம்

ஓவியனின் மேன்மையை உன்னை 
கண்டபின்தான் உணர்ந்தேன் 
ஆம் ..
எப்படிச்சொல்ல  புள்ளி ஒன்றில்
வரைந்துவிட்டான் ஓவியம் 
 உன் உதடுகளுக்கு மேல் 
ஒரு புள்ளி மச்சம் 
ஓவியமாய் நீ !
 

நன்றி

சிற்பங்கள் ஒருபோதும்  தன்னிலை மாறாது
அப்படித்தான் நீயும்!
நான் பார்க்கும்போதெல்லாம் 
சிரிக்கும் சிற்பமாய் என் முன்னே 
சிரிப்பதற்கும் ..
உன்னை செதுக்கிய
சிற்பிக்கும் 
நன்றி ...