இயந்திர உலகில் நானும் ஒருவனாய் இயங்க
வரையறுக்கப்பட்ட தூரத்தில் வாழ்க்கை ஓட்டம்
ஆம்..
விடிந்தால் அலுவலகமும் ,
பொழுது முடிந்தால் வீடுமாய்
இடைப்பட்ட நேரத்தில் காதலிக்கிறேன்
காசுக்கு கணிப்பொறியை ..
காதலியின் கைப்பிடித்து ஊடலும்
விசைப்பலகை உரையாடலுமாய் எட்டுமணி நேரம் ..
பசித்தால் புசிப்பதை மறந்து
காலப்பட்டியலில் கை நனைத்து
கரம் பிடித்து உண்ணும் உணவை
விரல் பிடித்து விட்டுச்செல்கிறேன்
அளவு சாப்பாட்டில் அரை பாதியை..
ஆண்டு அறுபதுக்கு முன்னே அந்நியன்
கொடுத்த சுதந்திரத்தை இன்று
ஆடைப்போட்டு காட்டும் பெண்கள் ..
உடை சுதந்திரத்தில் உடலையும் காட்டுகின்றனர் ..
எங்கே தொலைந்தார்கள் ?
எட்டு முழச்சேலையை இடைமறைய
இழுத்துக்கட்டி ..இடைக்குகீழ் தொங்கும் மயிரிழைக்கு
மன்மதப்பூவாம் மல்லி ஏந்தி ..
கரு முழுமதிக்கு இணையாய் கருப்பு பொட்டை
முன் நெற்றி வரும் பெண்கள் ..எங்கே?
இப்படியான என் வாழ்க்கை ஓட்டத்தில் ..
எப்படியோ விழுந்துவிட்டேன் ..
எழுந்து பார்க்கையில் என்னமோ இழபபதாய் உணர்வு
விழுந்த இடம் தேடி வெடுக்கென்று நான் செல்ல
விழுந்த இடத்தில் விருச்சமாய் நீயிருந்தாய் ..
உன்னிருக்கும் என் இதயம் பறிக்க
என்னிடத்து பட்டாம்பூச்சிகள் பறக்கும்போதேல்லாம்
உன்னிடத்து இமைமடித்து மலரும் கண்ணிரெண்டு மலர்களோ
கார்நிவோராஸ் மலராய் மலர்ந்திருக்க ..
என்னிடத்து பட்டாம்பூச்சிகளை
பசைப்போட்டு பறிக்கிறியே.....
வரையறுக்கப்பட்ட தூரத்தில் வாழ்க்கை ஓட்டம்
ஆம்..
விடிந்தால் அலுவலகமும் ,
பொழுது முடிந்தால் வீடுமாய்
இடைப்பட்ட நேரத்தில் காதலிக்கிறேன்
காசுக்கு கணிப்பொறியை ..
காதலியின் கைப்பிடித்து ஊடலும்
விசைப்பலகை உரையாடலுமாய் எட்டுமணி நேரம் ..
பசித்தால் புசிப்பதை மறந்து
காலப்பட்டியலில் கை நனைத்து
கரம் பிடித்து உண்ணும் உணவை
விரல் பிடித்து விட்டுச்செல்கிறேன்
அளவு சாப்பாட்டில் அரை பாதியை..
ஆண்டு அறுபதுக்கு முன்னே அந்நியன்
கொடுத்த சுதந்திரத்தை இன்று
ஆடைப்போட்டு காட்டும் பெண்கள் ..
உடை சுதந்திரத்தில் உடலையும் காட்டுகின்றனர் ..
எங்கே தொலைந்தார்கள் ?
எட்டு முழச்சேலையை இடைமறைய
இழுத்துக்கட்டி ..இடைக்குகீழ் தொங்கும் மயிரிழைக்கு
மன்மதப்பூவாம் மல்லி ஏந்தி ..
கரு முழுமதிக்கு இணையாய் கருப்பு பொட்டை
முன் நெற்றி வரும் பெண்கள் ..எங்கே?
இப்படியான என் வாழ்க்கை ஓட்டத்தில் ..
எப்படியோ விழுந்துவிட்டேன் ..
எழுந்து பார்க்கையில் என்னமோ இழபபதாய் உணர்வு
விழுந்த இடம் தேடி வெடுக்கென்று நான் செல்ல
விழுந்த இடத்தில் விருச்சமாய் நீயிருந்தாய் ..
உன்னிருக்கும் என் இதயம் பறிக்க
என்னிடத்து பட்டாம்பூச்சிகள் பறக்கும்போதேல்லாம்
உன்னிடத்து இமைமடித்து மலரும் கண்ணிரெண்டு மலர்களோ
கார்நிவோராஸ் மலராய் மலர்ந்திருக்க ..
என்னிடத்து பட்டாம்பூச்சிகளை
பசைப்போட்டு பறிக்கிறியே.....
.... தொடருவேன் ....