01 அக்டோபர் 2011

காதலின் கடைசி கூற்றாய்...

காதலர்களுக்கு சில கணைகள்
காதல் என்றால் என்ன ?
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலின்
புதுயுலகமாம் ...
ஏற்றுகொள்ள இயலவில்லை
என்னைப்பொருத்தமட்டில்
காதல் காமத்தின் காவியுடை ..
ஆம்
காமம் ஒன்று இல்லையேல் இங்கு
காதலும் இல்லை ..
காவியும்  இல்லை ..


கடவுள் முதல் கல்லறைப்பூக்கள் வரை
காதலை காமமாய் காட்சி ஏற்றும் ..
ஆம்
மகரந்ததிற்கு  தன் மடிவிரித்திரிக்கும் மலர்கள்
ஏன்? மொட்டுக்களாவே
மூடியிருக்கலாமே....
ஏன் ?
ஆடை அவிழ்த்து
அழகூட்ட  வேண்டும்...


ப(ம )றந்து வரும் மன்மத தேனீக்கள்
அங்கே ..
முதலில் பூக்களை புரிந்துகொள்ள வருவதில்லையே
புணர்ந்து ,காமத்தேனை கறந்து செல்கிறது ..
காதலின்
கடைசி கூற்றாய்..
புரிதல் மட்டுமல்ல காதல்
புனர்வதற்காக வெளிப்படுத்தும்
புனித புரிதல் செயல்தான் ..
காதல் .