12 செப்டம்பர் 2011

கடவுளும் கவிஞன்தான்

என்னுயிர் படைத்த பிரம்மன்
உன்னுயிர் படைத்தல் நேரம்
உன்னுடன் காதல் கொண்டானோ
பெண்ணுயிராய் படைக்கவேண்டிய உன்னை
என்னுயிர் எடுக்கும் எமனாக்கிவிட்டான்
ஆம்
 உலகின்  கவிதைகளை எல்லாம்
தொகுத்து
ஒட்டுமொத்த உயிர் புத்தகமாய்
உன்னில் எழுதிவிட்டான் ..
கடவுளையும் கவி பாட விட்டாயடி !!

கடவுளும் கவிஞன்தான்
உன்னைப்படைத்ததால் !!! 

கவிதைகள்தானே


குழல் 

காணத உண்மையை கண்டேன்
ஆம்
கரு நிற பூக்களின் மணம் தேடி வந்த
பசிமயக்க பட்டாம்பூச்சிகள்
பறக்க மனமின்றி படுத்துறங்கின
உன் குழலில் ...

பொட்டு
நெற்றி வானில்
குட்டி அம்மாவாசை


புருவங்கள்
அம்புங்கள் இன்றி
எய்தும்
வில் ..

மையிட்ட கண்கள்
தண்ணீரின்றி தவிக்கும்
மோக மீன்கள் ..

மூக்கு
நான் வாழ கொடுக்கும்
ஆக்ஸ்சிஜென்
கூடம் ..
உதடுகள்
அணையாமல் ஓடும்
எரிமலை குழம்புகள் ..


பற்கள்

 நீ
சிரிக்கையில்
அணிவகுக்கும்
நட்சத்திரங்கள் ...


கடலில்
காணத சங்காய்
உன் கழுத்தும்

மகுடங்கள்
தொங்கும் மடலாய்
 உன் காதுகளும்
கவிதைகள்தானே !!!