01 அக்டோபர் 2011

காதலின் கடைசி கூற்றாய்...

காதலர்களுக்கு சில கணைகள்
காதல் என்றால் என்ன ?
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலின்
புதுயுலகமாம் ...
ஏற்றுகொள்ள இயலவில்லை
என்னைப்பொருத்தமட்டில்
காதல் காமத்தின் காவியுடை ..
ஆம்
காமம் ஒன்று இல்லையேல் இங்கு
காதலும் இல்லை ..
காவியும்  இல்லை ..


கடவுள் முதல் கல்லறைப்பூக்கள் வரை
காதலை காமமாய் காட்சி ஏற்றும் ..
ஆம்
மகரந்ததிற்கு  தன் மடிவிரித்திரிக்கும் மலர்கள்
ஏன்? மொட்டுக்களாவே
மூடியிருக்கலாமே....
ஏன் ?
ஆடை அவிழ்த்து
அழகூட்ட  வேண்டும்...


ப(ம )றந்து வரும் மன்மத தேனீக்கள்
அங்கே ..
முதலில் பூக்களை புரிந்துகொள்ள வருவதில்லையே
புணர்ந்து ,காமத்தேனை கறந்து செல்கிறது ..
காதலின்
கடைசி கூற்றாய்..
புரிதல் மட்டுமல்ல காதல்
புனர்வதற்காக வெளிப்படுத்தும்
புனித புரிதல் செயல்தான் ..
காதல் .

12 செப்டம்பர் 2011

கடவுளும் கவிஞன்தான்

என்னுயிர் படைத்த பிரம்மன்
உன்னுயிர் படைத்தல் நேரம்
உன்னுடன் காதல் கொண்டானோ
பெண்ணுயிராய் படைக்கவேண்டிய உன்னை
என்னுயிர் எடுக்கும் எமனாக்கிவிட்டான்
ஆம்
 உலகின்  கவிதைகளை எல்லாம்
தொகுத்து
ஒட்டுமொத்த உயிர் புத்தகமாய்
உன்னில் எழுதிவிட்டான் ..
கடவுளையும் கவி பாட விட்டாயடி !!

கடவுளும் கவிஞன்தான்
உன்னைப்படைத்ததால் !!! 

கவிதைகள்தானே


குழல் 

காணத உண்மையை கண்டேன்
ஆம்
கரு நிற பூக்களின் மணம் தேடி வந்த
பசிமயக்க பட்டாம்பூச்சிகள்
பறக்க மனமின்றி படுத்துறங்கின
உன் குழலில் ...

பொட்டு
நெற்றி வானில்
குட்டி அம்மாவாசை


புருவங்கள்
அம்புங்கள் இன்றி
எய்தும்
வில் ..

மையிட்ட கண்கள்
தண்ணீரின்றி தவிக்கும்
மோக மீன்கள் ..

மூக்கு
நான் வாழ கொடுக்கும்
ஆக்ஸ்சிஜென்
கூடம் ..
உதடுகள்
அணையாமல் ஓடும்
எரிமலை குழம்புகள் ..


பற்கள்

 நீ
சிரிக்கையில்
அணிவகுக்கும்
நட்சத்திரங்கள் ...


கடலில்
காணத சங்காய்
உன் கழுத்தும்

மகுடங்கள்
தொங்கும் மடலாய்
 உன் காதுகளும்
கவிதைகள்தானே !!!

06 ஆகஸ்ட் 2011

கலைந்த கோலம்

கலைந்த அழகான 
ஒரு கோலம் 
அவளின் குழல் ..


உருகிய எரிமலைகளுக்கிடையில் 
ஓடும் பாலாறு 
அவளின் சிரிப்பு ...


பிச்சைக்காரன்

ஆனேன் !
பிச்சைக்காரன் 
சில்லறைக்காக அல்ல 
உன் 
சிரிப்புக்காக ...


ஓவிய மச்சம்

ஓவியனின் மேன்மையை உன்னை 
கண்டபின்தான் உணர்ந்தேன் 
ஆம் ..
எப்படிச்சொல்ல  புள்ளி ஒன்றில்
வரைந்துவிட்டான் ஓவியம் 
 உன் உதடுகளுக்கு மேல் 
ஒரு புள்ளி மச்சம் 
ஓவியமாய் நீ !
 

நன்றி

சிற்பங்கள் ஒருபோதும்  தன்னிலை மாறாது
அப்படித்தான் நீயும்!
நான் பார்க்கும்போதெல்லாம் 
சிரிக்கும் சிற்பமாய் என் முன்னே 
சிரிப்பதற்கும் ..
உன்னை செதுக்கிய
சிற்பிக்கும் 
நன்றி ...

05 ஆகஸ்ட் 2011

பிடித்தது .....

 பறித்த பின்னரும் பங்கு போடவரும் 
தேனீக்கள் உன் கூந்தலில் ஏறிய
மல்லிச்சரத்திற்காக .... 

06 ஜூலை 2011

கணிப்பொறி காதலன்

இயந்திர உலகில் நானும் ஒருவனாய் இயங்க
வரையறுக்கப்பட்ட தூரத்தில் வாழ்க்கை ஓட்டம்
ஆம்..
விடிந்தால் அலுவலகமும் ,
பொழுது முடிந்தால் வீடுமாய்
இடைப்பட்ட நேரத்தில் காதலிக்கிறேன்
காசுக்கு  கணிப்பொறியை ..
காதலியின் கைப்பிடித்து ஊடலும்
விசைப்பலகை உரையாடலுமாய் எட்டுமணி நேரம் ..


பசித்தால் புசிப்பதை மறந்து
காலப்பட்டியலில் கை நனைத்து
கரம் பிடித்து உண்ணும்  உணவை
விரல் பிடித்து விட்டுச்செல்கிறேன்
அளவு சாப்பாட்டில் அரை பாதியை..

ஆண்டு அறுபதுக்கு முன்னே அந்நியன்
கொடுத்த சுதந்திரத்தை இன்று
ஆடைப்போட்டு காட்டும்  பெண்கள் ..
உடை சுதந்திரத்தில் உடலையும் காட்டுகின்றனர் ..

எங்கே தொலைந்தார்கள் ?
எட்டு முழச்சேலையை இடைமறைய
இழுத்துக்கட்டி ..இடைக்குகீழ் தொங்கும் மயிரிழைக்கு
மன்மதப்பூவாம் மல்லி ஏந்தி ..
கரு முழுமதிக்கு இணையாய் கருப்பு பொட்டை
முன் நெற்றி வரும் பெண்கள் ..எங்கே?

இப்படியான என் வாழ்க்கை ஓட்டத்தில் ..
எப்படியோ விழுந்துவிட்டேன் ..
எழுந்து பார்க்கையில் என்னமோ இழபபதாய் உணர்வு
விழுந்த இடம் தேடி வெடுக்கென்று நான் செல்ல
விழுந்த இடத்தில் விருச்சமாய் நீயிருந்தாய் ..

உன்னிருக்கும் என் இதயம் பறிக்க
என்னிடத்து பட்டாம்பூச்சிகள் பறக்கும்போதேல்லாம்
உன்னிடத்து இமைமடித்து மலரும் கண்ணிரெண்டு மலர்களோ
கார்நிவோராஸ் மலராய் மலர்ந்திருக்க ..
என்னிடத்து பட்டாம்பூச்சிகளை
பசைப்போட்டு பறிக்கிறியே..... 


   ....                      தொடருவேன் ....

15 ஜூன் 2011

நிலாப்பெண்

உலகத்தின் காதலர்களை எல்லாம்
கவிஞ்சர்களாக்கும்
ஒரேப்பெண் !
உன்னை பிரதி எடுத்து நிற்கும் 
நிலவு மட்டுமே !

 





காதல் குறள்

புரியாத  பொருள்  ஒன்றும் இல்லை
என்னிடத்தில் உன்னைத்தவிர ...





14 ஜூன் 2011

காதல் ..

கல்லூரி காதலும்
கடையில் வாங்கும் பொருளை போன்றது
காதலின் வரைவுக்காலம் (exp date)
கல்லூரி முடியும் வரை....
------------------------------------------------------------------

சொல்லிய காதல் சுமைதரும் ....
சொல்லாத காதல் சுகம்தரும்...
------------------------------------------------------------------
காதலித்தவர்களின் பரவலான கூற்று...
என் காதல் தோற்றுவிட்டது...
என்று காதலை அகம் கூறுகிறார்கள்
உண்மையில் அங்கே காதல் தோற்பதில்லை
தன காதலை ஏற்காத காதலனும்,காதலியும் தான்
தோற்கிறார்கள்....!!!
--------------------------------------------------------------------

காதல் ..
அசைவில்லா நீரில் தெரியும்
அழகிய உன் முகம் போன்றது...
அப்படியே பார்த்துக்கொள்..
சொல்லிவிடாதே உன் காதலை
கல்லெறிந்த நீரைப்போல் கலைந்துவிடும் ...
உன் முகம் போன்ற காதல்...

நான் பாவம்

இனியொரு முறை உன் வீட்டு
முகப்பான் முன் செல்லாதே
பின்பு
பாவம் நான் ...
என்னை விட அழகாய் சொல்லிவிடும்
உன் அழகை
கவிதைகளாய்!

12 ஜூன் 2011

வட்டிக்கு வரிகள்

தருணம் ஒன்று தந்துவிடடி
பெண்ணே ...உன்னை நேர்காண
பின்பு....
வைரமுத்துவும்
வட்டிக்கு வரிகள் கேட்பான்
என்னிடத்தில்!  


14 ஏப்ரல் 2011

ஒரு புள்ளி மச்சம்

ஓவியனின் மேன்மையை உன்னை
கண்டபின்தான் உணர்ந்தேன்
ஆம் ...
ஒரு புள்ளியில் வரைந்து விட்டான்
ஓவியம் !!
உன் உதடுகளுக்குமேல் ஒரு புள்ளி மச்சம்
ஓவியமாய் நீ !